காலையில் எழுந்ததும் இதையெல்லாம் பண்ணுங்க…. அப்பறம் என்ன அந்த நாள் சூப்பர் தான்…!!
நம்மில் பலருக்கும் காலையில் எழுவதே சோம்பேறித்தனமாக இருக்கும், அலாரம் ஒரு பக்கம் அடிக்க, மறுபக்கம் போர்வையை இழுத்து மூடி தூங்குவதே தனி சுகம் தான்.
அப்படியே எழுந்து அலுவலகம், பள்ளிக்கு செல்வதென்பதே பெரும் வேலையாக மாறிவிட்டது. ஆனால் ஒருசில பழக்கவழக்கங்களை பின்பற்றினால் அந்த நாள் முழுவதுமே புத்துணர்ச்சியாக இருக்கலாம்.
* காலையில் எழும்போது, வலதுபக்கம் திரும்பி பின்னர் படுக்கையில் இருந்து எழுந்தால் அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும்.
* காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது புத்துணர்ச்சியை அளிக்கும், உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றி விடுகிறது.
* எழுந்தவுடன் போனும், கையுமாக இருக்க வேண்டும், இந்த முறையை பாலோ பண்ணவும். 20:20:20 என்ற கொள்கையை மேற்கொள்ள வேண்டும். அவை 20 நிமிட உடற்பயிற்சி, 20 நிமிட தியானம், 20 நிமிடம் ரிலாக்ஸ், உதாரணத்திற்கு செய்திகள், நற்சிந்தனைகள், பாட்டு கேட்கலாம்.
* குறிப்பாக காலை உணவை ஒருபோதும் தவிர்க்க வேண்டாம், அந்த நாள் முழுவதும் உற்சாகமாக செயல்பட காலை உணவே ஆற்றலை தருகிறது, அதுமட்டுமின்றி காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
* ஆண்களில் சிலர் காலை எழுந்தவுடன் புகைப்பிடிப்பதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். பொதுவாக புகைப்பிடிப்பது என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. அதனை காலை எழுந்த உடன் செய்வது என்பது மிகவும் ஆபத்தான செயலாகும்.
Average Rating