18 வயது மனைவியை படுகொலை செய்த கணவன் தற்கொலை…!!
Read Time:56 Second
மாத்தளையில் தனது இளம் மனைவியை படுகொலை செய்த கணவன் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தளை, அகலவந்த பிரதேசத்தில் 18 வயதான தமது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்ததன் பின்னர் தப்பிச் சென்றிருந்தார்.
இதனைடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டதுடன், அவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக தமது மனைவியை நேற்று முன்தினம் அவர் கோடரியால் தாக்கி கொலை செய்தார்.
Average Rating