வட மாகாண முதலமைச்சரை கைது செய்ய கோரி சதி…!!
Read Time:1 Minute, 9 Second
வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனை கைது செய்யுமாறு கோரி எதிர்வரும் புதன்கிழமை போராட்டமொன்று நடத்தப்பட உள்ளது.
கொழும்பு கோட்டே ரயில் நிலையத்திற்கு எதிரில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
உடனடியாக விக்னேஸ்வரனை கைது செய்யுமாறு கோரி இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இனவாதம், மத வாதத்தை தூண்டி தான்தோன்றித்தனமாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் செய்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
வடக்கில் சிங்கள பௌத்தத்திற்கு எதிராக விக்னேஸ்வரன் முன்னெடுத்து வரும் போராட்டங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென உதய கம்மன்பில கோரியுள்ளார்.
Average Rating