பொதுமக்களால் தாக்குதலுக்குள்ளான வைத்தியர் வைத்தியசாலையில் அனுமதி…!!
Read Time:1 Minute, 18 Second
திருகோணமலை பிரதேசத்தில் நேற்று இரவு நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்து வந்த சிலர் வைத்தியர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை பதவிய ஸ்ரீ புர பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்தியர் மீது இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
வைத்தியர் தனது வீட்டில் இருந்து வருகை தர ஏற்பட்ட தாமதமே தாக்குததல் நடாத்த காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்குள்ளான வைத்தியர் வைத்தியசாலையை மூடிவிட்டு சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த சம்பவத்தினால், வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த ஏனைய நோயாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Average Rating