வாடிப்பட்டி அருகே வீடு புகுந்து 30 பவுன் நகை-பணம் கொள்ளை…!!
வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டியை சேர்ந்தவர் ஜெயரட்சகன். இவரது மனைவி அலமேலு (வயது 57) இவர், மனநலம் பாதிக்கப்பட்ட மகள் ராஜலெட்சுமி (32) யுடன் வசித்து வருகிறார்.
நேற்று இரவு தாயும், மகளும் வீட்டில் படுத்து தூங்கினர். இன்று காலை அவர்கள் கண் விழித்தபோது, பீரோ திறந்து பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டினுள் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது தெரியவர, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது வீட்டின் மாடிக்கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே வந்திருப்பது தெரியவந்தது. பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள், ரூ.2,400 கொள்ளை போயிருப்பதாக அலமேலு தெரிவித்தார்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சமயநல்லூர் காவல் துணை கண்காணிப்பாளர் வனிதா சம்பவ இடம் வந்து பார்வையிட்டார். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தினர்.
Average Rating