பயங்கரத்தின் உச்சக்கட்டம்: யானைக்கு எமனாக வந்த பஸ்ஸின் நேரடிக் காட்சி…!! வீடியோ
Read Time:1 Minute, 20 Second
உலகிலுள்ள நாடுகளில் தாய்லாந்தானது யானைகளின் சொர்க்கபூமி என்று குறிப்பிடலாம். அந்த அளவிற்கு யானைகள் நிறைந்த நாடாக காணப்படுவதுடன், இங்கு வெள்ளை நிற யானைகளும் குறிப்பிடத்தக்க அளவில் உயிர்வாழ்கின்றன.
இங்கு யானைகள் அதிகமாக இருப்பதனால் இரவு நேரங்களில் காட்டுவழிப் போக்குவரத்து செய்வது மிகவும் பயங்கரமாகும். இரவு நேரங்களில் வீதியின் ஒரு புறத்திலுள்ள காட்டிலிருந்து மறுபுறத்திலுள்ள காட்டிற்கு இரை தேடி யானைகள் செல்வதே இதற்கு காரணமாகும்.
இவ்வாறு ஓரிரு தினங்களுக்கு முன்னர் அதிவேக நெடுஞ்சாலையை கடக்க முயன்ற யானையுடன் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த பஸ் ஒன்று மோதியுள்ளது. இதில் யானை சம்பவ இடத்தில் இறந்துள்ளது. இதன்போது பஸ்ஸின் முன்பகுதி முற்றாக சேதமடைந்ததுடன் சாரதியும் படுகாயமடைந்துள்ளார்.
Average Rating