தங்ககட்டிகள் கடத்தல் வேட்டை: ஒருவர் கைது…!!
Read Time:1 Minute, 17 Second
டுபாயிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு தங்கக் கட்டிகளை கொண்டு வந்த பெண் ஒருவரை கட்டுநாயக்க சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் மேற்படி பெண் (60) மீது சந்தேகம் கொண்ட விமான நிலையச் சுங்க அதிகாரிகள் அவர்களுடைய கைப்பையைச் சோதனையிட்ட போது அதில் 30 இலட்சம் ரூபா பெறுமதியான 500 கிராம் நிறையுடைய தங்கக் கட்டிகளை வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணை விசாரணைக்குட்படுத்தியதன் பின்னர் குறித்த தங்கக் கட்டிகளை அரசுடைமை ஆக்கியதுடன் ஒரு இலட்சம் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது.
Average Rating