டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக பதிவு…!!
Read Time:55 Second
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதிக்குள் 42,613 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 51.29 வீதமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.
இதேவேளை டெங்கு ஒழிப்பு வாரம் நாளையுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating