மணமாகாத தாய்க்குப் பிறக்கும் குழந்தையின் பிறப்பினை பதிவு செய்வது எப்படி?

Read Time:4 Minute, 21 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90இலங்கைப் பதி­வாளர் நாயகத் திணைக்­களம் திரு­ம­ண­மா­காத தாய்க்குப் பிறக்கும் குழந்­தையின் பிறப்­பினைப் பதிவு செய்யும் புதிய நடை­மு­றை­யினை அறி­முகம் செய்து வைத்­துள்­ளது.

இலங்­கையில் சிறுவர் பரம்­ப­ரையின் எதிர்­கா­லத்­தினை பாது­காக்கும் நோக்­குடன் பெற்­றோர் திரு­மணம் புரி­யாத சந்­தர்ப்­பத்தில் பிள்­ளையின் பிறப்­பினை பதிவு செய்யும் போது தந்­தையின் பெயர் ‘தெரி­யாது’ என்­ப­தற்குப் பதி­லாக தாய் மற்றும் தகப்பன் இரு­வ­ரி­னதும் விருப்­பத்தின் பேரில் தகப்­பனின் பெய­ரினை பிறப்­புச் ­சான்­றி­தழில் உட்­பு­குத்­து­வ­தற்கு சந்­தர்ப்பம் பெற்றுக் கொடுக்­கப்­பட்­டுள்­ள­தாக பதி­வாளர் நாய­கத்­ தி­ணைக்­க­ளத்தின் 07/2016ம் இலக்க சுற்று நிருபம் சுட்­டிக்­காட்­டு­கின்­றது.

மேலும் பிறப்பு, இறப்புச் சட்­டத்தின் 21வது பிரி­வினால் சட்­ட­ரீ­தி­யாக திரு­ம­ண­மா­காத ஜோடி­க­ளுக்குப் பிறக்கும் பிள்­ளை­யி­னது பிறப்­பினை தகப்­பனின் தக­வல்­க­ளினை உட்­பு­குத்தி பதிவு செய்­வ­தற்­காக ஏற்­பா­டுகள் உள்­ளன.

பிள்­ளையின் பிறப்­பினை பதிவு செய்­வ­தற்­காக பெற்­றோரின் விவாகச் சான்­றி­த­ழினை கட்­டா­ய­மான சான்­றாகக் காட்­டு­வ­தனால் இவ்­வா­றான பிள்­ளை­களின் பிறப்­பினை பதிவு செய்­வ­தனை தவிர்ப்­ப­தற்கு அல்­லது தந்­தையின் தக­வல்கள் இன்றி பதிவு செய்­வ­தற்கு இட­முள்­ளது.

ஆகை­யினால் திரு­ம­ண­மா­காத தாய்க்குப் பிறக்கும் பிள்­ளை­களின் பிறப்­பினை பதிவு செய்­வ­தற்கு வேண்­டுகோள் சமர்ப்­பிக்­கப்­படும் சந்­தர்ப்­பத்தில் தாயுடன் தகப்­ப­னையும் அழைப்­ப­தற்கு அனைத்­து­வித முயற்­சி­க­ளையும் மேற்­கொள்ளல் வேண்டும். பெற்றோர் இரு­வரும் இதற்­காக தோற்­று­வதன் கார­ண­மாக பிள்­ளையின் பிறப்புச் சான்­றி­த­ழுக்கு தகப்­பனின் தக­வல்­க­ளினை உட்­பு­குத்திப் பதிவு செய்­வ­தற்கு இயலும் என கட்­டா­ய­மாக பெற்­றோ­ருக்கு அறி­வு­றுத்த வேண்டும்.

அதற்­கி­ணங்க பிறப்புச் சான்­றி­தழில் 10வது நிரலில் தாய் மற்றும் தந்­தையின் ஒப்­பத்­தினைப் பெறு­வ­தோடு பிறப்­புச்­சான்­றி­தழின் 4 வது நிரலில் தகப்­பனின் தக­வல்­களை உட்­பு­குத்தி, 6 வது நிரலில் இல்லை என குறிப்­பிட்டு, 7 வது நிரலில் தாய்­வழி பாட்­டனின் தக­வல்­க­ளினை குறிப்­பிட்டு, 8 வது நிரலில் ‘தாய் இலங்­கையில் பிறந்­தவர்’ என அல்­லது பொருத்­த­மான விதத்தில் தாய் வழிப்­பூட்­டனின் தக­வல்­களைக் குறிப்­பிட்டு 9 வது நிரலில் பெற்றோர் இரு­வ­ரி­னதும் பெய­ரினைக் குறிப்­பிட்டு திரு­ம­ண­மா­காத தாய்க்குப் பிறக்கும் குழந்­தையின் பிறப்­பினைப் பதிவு செய்­­வ­தற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து மேலதிக மாவட்ட பதிவாளர்கட்கும், அனைத்து பிறப்பு, இறப்பு மற்றும் வைத்திய பதிவாளர்கட்கும் பதிவாளர் நாயகம், ஈ.எம்.குணசேகர 07/2016ம் இலக்க சுற்று நிருபத்தில் குறிப்பிட்டு அனுப்பி வைத்துள்ளமை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறாலில் உள்ளது நல்ல கொலஸ்ட்ராலா…!!
Next post தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இரு பெண்கள்…!!