தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இரு பெண்கள்…!!
மடுல்சீமை பிரதேசத்தில் 11 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது வீட்டுக்கு பின்னால் உள்ள மரம் ஒன்றில் குறித்த மாணவி நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவியின் தந்தை மத்திய கிழக்கு நாடொன்றில் பணி புரிவதாகவும், தாய் ஒரு ஆசிரியை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, வவுனியா ஏழாம் ஒழுங்கையில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்று மதியம் 2.40 மணியளவில் வவுனியா ஏழாம் ஒழுங்கை குகன்நகர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
தூக்கில் தொங்கியவர் இராணிமலர் (வயது 68) எனவும், இவர் இரண்டு தினங்களுக்கு முன் தூக்கில் தொங்கியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த தற்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Average Rating