11 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை…!!
Read Time:53 Second
மடுல்சீமை பிரதேசத்தில் 11 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது வீட்டுக்கு பின்னால் உள்ள மரம் ஒன்றில் குறித்த மாணவி நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவியின் தந்தை மத்திய கிழக்கு நாடொன்றில் பணி புரிவதாகவும், தாய் ஒரு ஆசிரியை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Average Rating