கை,கால்கள் கட்டப்பட்டு வர்த்தகரின் சடலம் மீட்பு…!!

Read Time:3 Minute, 48 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்ட வர்த்தகர் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை சிலாபம் வட்டக்களி வீடொன்றிலிருந்து சிலாபம் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

சிலாபம் வட்டக்களி புனித ஜுஸேவாஸ் தேவாலயத்துக்கு அருகே வர்ணகுலசூரிய நியூட்டன் ரோய் பெர்னாண்டோ வயது 45 என்ற இரண்டு குழந்தைகளின் தந்தையே இவ்வாறு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கைகள் இரண்டும் பின்பகக்கமாகக் கட்டப்பட்டு கால்கள் அவர் அணிந்திருந்த சேர்ட் ஒன்றினால் கட்டப்பட்டிருந்த நிலையில் அவரது படுக்கை அறையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரணமான நபர் சுமார் 25 வருட காலம் இத்தாலியில் தொழில் புரிந்த பின் இலங்கை வந்து வட்டக்களி புனித ஜுஸேவாஸ் தேவாலயத்துக்கு அருகே காணியொன்றை கொள்முதல் செய்து அதில் வீடொன்றையும் கட்டி வசித்து வந்துள்ளார்.

நேற்று பகல் திடீரென சிலாபம் பொலிஸாருக்கு வந்த தொலைபேசி அழைப்பையடுத்து சிலாபம் பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து சோதனை செய்தனர்.

இந்நிலையில் வீட்டின் மேல்மாடியில் படுக்கையறையில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.கழுத்து நெரிக்கப்பட்டு இவர் கொலை செய்யப்படடுள்ளதாக தெரிவித்த பொலிஸார் ஏதேனும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் தொடர்பாக இந்தக் கொலை நடைபெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டனர்.

இத்தாலியிலிருந்து வந்த இந்நபர் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மோதா இன மீன்களை வளர்க்கும் தொழிலை செய்து வந்திருக்கிறார்.

இவரது மனைவி இவரைப் பிரிந்து வாழும் நிலையில் குளியாப்பிட்டிப் பகுதியில் இவர் வசித்து வருகிறார். 13 வயது மகள் சிலாபம் கன்னியர் மடத்தில் தங்கி கல்வி கற்றுவருகிறார்.

அவரது ஒரே மகன் இந்த வருடத்திலிருந்து தந்தையுடன் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

சம்பவ தினம் மகனைப் பாடசாலைக்கு அனுப்பி வைத்த பின் சுமார் 11 மணியளவில் வீட்டுக்கு வந்த வர்த்தகரை இரகசியமாக உட்புகுந்த கொலையாளிகள் கொலை செய்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சிலாம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் ஏ. விதிசிங்க, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சனத் விக்கிரமசூரிய, பொலிஸ் பொறுப்பதிகாரி வசந்த குமார ஆகியோரின் ஆலோசணைக்கமைய குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி வசந்தகுமார, சப்இன்ஸ்பெக்டர் விக்கிரமசிங்க உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைதாகவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேற்றுப்புண், பித்தவெடிப்பை எளிதில் போக்க வேண்டுமா…!!
Next post அடுத்தவள் புருஷன் மீது ஆசைபடும் பெண்கள் – காரணம் என்ன?