ஆண்களை அடிப்பதற்கு வயதோ, இடமோ தேவையில்லை..!!
வீட்டை விட்டு வெளியில் செல்லும் பெண்களுக்கு ஆண்களால் அதிக ஆபத்துகள் ஏற்படுகின்றன.
சில பெண்கள் இந்த ஆபத்தினை கண்டு அஞ்சி ஓடுவதால் தான் ஆபத்து அவர்களை துரத்துகிறது.
எனவே எதிர்த்து நின்று போராட வேண்டும். சமீபத்தில் ஹரியான மாநிலத்தை சேர்ந்த பெண்கள் இருவர் பள்ளிமுடித்து வீட்டிற்கு திரும்பிகொண்டிருந்தனர்.
அப்போது இவர்களின் பின்னால் வந்த 3 நபர்கள், இவர்களை கிண்டல் செய்துள்ளனர். அதற்கு இப்பெண்கள் மௌனமாக சென்றுள்ளனர். அந்த ஆண்கள் வாய்வார்த்தையோடு நிறுத்திக்கொள்ளாமல், அப்பெண்களின் அங்கங்களை தொட ஆரம்பித்துள்ளனர்.
இதனால் கோபம் கொண்ட அப்பெண்கள் விஸ்வரூபம் எடுத்து, அந்த ஆண்களை துவசம் செய்துள்ளனர். இதுபோன்ற அறுவருக்கத்தக்க காரியத்தில் ஈடுபடும் ஆண்களை தண்டிப்பதற்கு வயது வித்தியாசமோ, தக்க இடமோ உங்களுக்கு தேவையில்லை.
பல்பேர் மத்தியில் நாம் இவ்வாறு நடந்துகொள்கிறோமோ. இது நமக்கு அவமானமாக இருக்காதா? மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்? என்ற சிந்தனைகள் உங்கள் மனதில் எழவே கூடாது.
கடவுள் படைப்பில் பல்வேறு உணர்வுகளை உள்ளடக்கிய ஒரு உயிர்தான் பெண் என்பவள், என நினைக்காத ஆண்களுக்கு நீங்கள் பதிலடி கொடுத்து தான் ஆகவேண்டும்.
இந்தியாவில் மட்டும் ஒரு நாளைக்கு 100 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகின்றனர் என National Crime Records Bureau (NCRB) அமைப்பு தெரிவித்துள்ளது.
18 முதல் 20 வயதுக்குட்பட்ட 41 சதவீதம் பேர் மற்றும் 21 முதல் 40 வயதுக்குட்பட்ட 36 சதவீதம் பெண்கள், ஆண்களால் தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர் என புள்ளியியல் விவரம் தெரிவித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு, 5,192 பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களின் வயது 15 முதல் 30 வயது ஆகும் என NCRB அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5
Average Rating