சட்டவிரோத கருக்கலைப்பு; கணவன், மனைவி கைது…!!

Read Time:3 Minute, 10 Second

abortion_newsசட்­ட­வி­ரோ­த­மான முறையில் கருக்­க­லைப்புச் செய்த நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட பெண் மற்றும் அவ­ரது கண­வரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தோடு மற்­றொ­ரு­வரைக் கைது செய்ய விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­தாக ஆன­மடு பொலிஸார் தெரி­வித்­தனர்.

ஆன­மடு பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட ஆன­மடு மெரங்­கொட பிர­தே­சத்தைச் சேர்ந்த 35 வய­து­டைய பெண்ணும் அவ­ளது கண­வ­ரு­மான இரு பிள்­ளை­களின் பெற்­றோரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

கைது செய்­யப்­பட்ட சந்­தேக நப­ரான பெண் சில மாதங்­க­ளுக்கு முன்னர் தனது கண­வ­ருடன் முரண்­பட்டுக் கொண்டு நவ­கத்­தே­கம பிர­தே­சத்தைச் சேர்ந்த ஒரு­வ­ரோடு சென்று அவ­ருடன் வாழ்ந்து வந்­துள்ளார்.

பின்னர் சில நாட்­க­ளுக்கு முன்னர் தனது கண­வ­ருடன் சமா­தா­ன­மாகி மீண்டும் தனது வீட்­டுக்கு வந்­துள்ள குறித்த பெண் கண­வ­ருடன் வாழ்ந்து வந்­துள்­ள­ போதும் அந்­நேரம் அப்பெண் கர்ப்­ப­முற்­றி­ருந்­த­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் கடந்த மாதம் 20ஆம் திகதி குறித்த பெண் வயிற்று வலி எனத் தெரி­வித்து ஆன­மடு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். அப்­போது அப்பெண் சட்­ட­வி­ரோத கருக்­க­லைப்பு செய்து

கொண்­டி­ருந்­ததை தெரிந்து கொண்ட வைத்­தி­ய­ர்கள் அவரை மேல­திக சிகிச்­சைக்­காக புத்­தளம் வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றி­யுள்­ளனர்.

தனது கணவர் வழங்­கிய மாத்­தி­ரை­யினை உட்­கொண்ட பின்னர் கருக்­க­லைப்பு ஏற்­பட்­ட­தாக அப்பெண் புத்­தளம் வைத்­தி­ய­சாலை வைத்­தி­யர்­க­ளிடம் தெரி­வித்­தி­ருந்­த­தோடு சிகிச்சை பெற்று வீடு திரும்­பிய பின்னர் கடந்த 30ஆம் திகதி ஆன­மடு பொலி­ஸா­ரிடம் தனது கள்­ளக்­கா­தலன்

வழங்­கிய மாத்­தி­ரையை உட்­கொண்­ட­தா­லேயே தனக்கு கருக்­க­லைப்பு ஏற்­பட்­ட­தாகத் தெரி­வித்­துள்ளார்.

அவ­ளது முதலாவது வாய்மொழியின் அடிப்படையில் அவரது கணவரைக் கைது செய்துள்ள பொலிஸார் அவரது இரண்டாவது வாய்மொழிக்கமைய அவரது கள்ளக்காதலனைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 50 இலட்சம் பெறுமதியான சிகரட்டுகள் மீட்பு…!!
Next post மாதவிடாய் காலத்தில் உடல் எடை அதிகரிக்குமா?