காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் பலி…!!
Read Time:56 Second
பொலனறுவை – கதுருவெல பிரதேசத்தில் இன்று (04) காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் வீட்டில் வைத்தே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதோடு, உயிரிழந்தவர் 64 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
அதே யானை கதுருவெல நகரத்தில் உள்ள பாடசாலையில் மதிலுக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திவுலான காட்டுப்பகுதியில் இருந்து வந்ததாகக் கூறப்படும் இந்த காட்டு யானை, பின்னர் பொலன்னறுவை கல்லுல்ல காட்டுப்பகுதியை நோக்கிச் சென்றுள்ளதாக யானையைக் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
Average Rating