மற்றுமொரு ஆசிரியரும் தாக்கப்பட்டுள்ளார்…!!
Read Time:1 Minute, 15 Second
கொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றில் உள்ள மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை தடுக்கமுயற்சித்த ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.
இந்த சம்பவத்தை நேரில் பார்வையிட்ட ஆசிரியர்களோ அல்லது தாக்கப்பட்ட ஆசிரியரோ பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய வேண்டாம் என்றும் அந்த விடயத்தை பெரிது படுத்தவேண்டாம் என்றும் குறித்த பாடசாலை அதிபர்கூறியுள்ளார்.
இதேவேளை, முன்னரும் குறித்த பாடசாலை அதிபரால் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டதுடன், அதிபருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அத்துடன் குறித்த பாடசாலை அதிபரை பதவி நீக்குவதாக பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating