கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சேவைகள் நிறுத்தம்…!!
கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சேவைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கை விமான சேவையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி சுமார் 200 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள புனர்நிர்மாண பணிகளின் நிமித்தம் குறித்த விமான சேவைகள் இரத்து செய்யப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடு பாதையில் திருத்த வேலைகள் செய்யப்படவுள்ளன.
விமான நிலையத்தில் அடுத்த வருடம் ஜனவரி 6 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 6 திகதி வரையில் இந்த திருத்தப் பணிகள் இடம் பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே விமான நிலையம் காலை 8.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரையில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளும் போது மூடி வைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் 8 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை பயன்படுத்தியள்ளனர்
கடந்த வருடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜப்பானிற்கு விஜயம் செய்த போது விமான நிலைய திருத்த பணிகளுக்காக 74 பில்லியன் ரூபா கடனாக பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating