அடையாளம் தெரியாத நபர்களால் இலங்கையை அழிக்க முற்பட்ட தீ…!!
Read Time:1 Minute, 23 Second
வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பட்டிபொல – ஒஹிய வன எல்லைப்பகுதியிலுள்ள கந்தெபுகுல்பொல மலைத்தொடரில் நேற்று காலை பாரிய அளவிலான தீ பரவியது.
இந்த தீயினால் சுமார் 100 ஏக்கர்களுக்கும் அதிகமான அரச வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாக வெலிமடை பிரதேச செயலக இடர் முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
குறித்த தீயை அணைக்க பிரதேசவாசிகள், வெலிமடை பிரதேச செயலக இடர் முகாமைத்துவ அதிகாரிகள், வன ஜீவராசிகள் திணைக்களம், படை வீரர்கள் ஆகியோர் இணைந்து தொடர்ந்தும் செயற்பட்டு வந்துள்ளனர்.
பாரிய முயற்சிக்கு பின்னர் இன்று அதிகாலை சுமார் ஒரு மணியளவில் தீயானது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இதேவேளை அடையாளம் தெரியாத நபர்களால் இந்த காட்டுப்பகுதிக்கு தீ மூட்டப்பட்டிருக்கலாமென பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating