சவரக்கத்தியால் பெண் அறிவிப்பாளரை வெட்டிய நபரை தேடி பொலிஸார் வலைவீச்சு…!!

Read Time:1 Minute, 22 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-2பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த இலத்திரனியல் ஊடகம் ஒன்றில் இளம் பெண் அறிவிப்பாளரது பின்புறத்தை சவரக் கத்தியால் வெட்டிய நபரை கைது செய்ய மகரகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தனது கைப்பையை யாரே இழுப்பதை உணர்ந்த பெண் அறிவிப்பாளர் திரும்பி பார்த்த போது சவரக்கத்தியால் வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில் பஸ் நிலையத்தில் இருந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவரின் பின்புறத்தையும் சந்தேக நபர் வெட்டியுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த இரண்டு யுவதிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு யுவதிக்கு 10 தையல்களும் மற்றைய யுவதிக்கு 7 தையல்களும் போடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து மகரகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏனுங்க மாமா! சமையல் ரெடி… சாப்பிட வாரீங்களா – க்யூட் குட்டி…!! வீடியோ
Next post மாலபே கல்லூரியில் மீட்கப்பட்ட உடல்பாகங்கள்! டீ.என்.ஏ. சோதனைக்கு உத்தரவு…!!