15 வயது சிறுமியை கடத்திச் சென்ற 17 வயது இளைஞன் கைது…!!
Read Time:1 Minute, 12 Second
பெற்றோரை இழந்து தனது பாட்டியின் பொறுப்பில் வளர்ந்து வந்த 15 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று அவருடன் குடும்பம் நடத்திய 17 வயது இளைஞன் ஒருவர் சிலாபம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் சிலாபம் – அம்பகந்தவில பிரதேசத்தில் இறால் பண்ணை ஒன்றில் தொழில் புரிந்து வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த சிறுமியை கடத்தி வந்த இளைஞன் அம்பகந்தவில பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த இளைஞருடன் காதல் தொடர்பு ஏற்பட்டதாலேயே இளைஞருடன் வந்து குடும்பம் நடத்தியதாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Average Rating