பள்ளிகொண்டா அருகே தொல்லை கொடுத்த நாயை நரிக்குறவரை ஏவி சுட்டுக்கொன்ற கிராம மக்கள்..!!

Read Time:3 Minute, 44 Second

201610061554345343_dog-shot-dead-by-villagers-for-trouble-near-pallikonda_secvpfவேலூர் அடுத்த பள்ளிகொண்டா அருகே உள்ள இறைவன்காடு சின்ன கல்லாங்குத்து பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 49). விவசாயி. இவர், அல்சே‌ஷன் வகை நாயை விலைக்கு வாங்கி செல்லப் பிராணியாக வளர்த்தார்.

அந்த நாயின் தோற்றம், உருவத்தில் பெரிதாக அச்சுறுத்துவது போல இருந்தது. சீனிவாசன் செல்ல பிராணியாக வளர்த்ததால், அவரது சொல்லுக்கு மட்டும் நாய் கட்டுப்படும். மற்றவர்களிடம் ஆக்ரோ‌ஷமாக குரைத்து கடிக்க பாய்ந்ததாக கூறப்படுகிறது.

அடிக்கடி, வீட்டில் நாயை கட்டி வைக்காமல், தெருவில் அவிழ்த்து விட்டுள்ளார். இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். வீதியில் யாரும் நடமாட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. நாயை கட்டி வைக்கும்படி பலமுறை, உரிமையாளர் சீனிவாசனிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவர், கண்டு கொள்ளவில்லை. நாயை வீதியில் அவிழ்த்து விடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார். இந்த செயல், சிலரை ஆத்திரமடைய செய்தது. சீனிவாசனின் நாயை கொன்றுவிட திட்டம் வகுத்தனர்.

அதற்காக, பணம் கொடுத்து நரிக்குறவரை ஏற்பாடு செய்து இன்று காலை அழைத்து வந்தனர். வழக்கம் போல், சீனிவாசன் நாயை அவிழ்த்து விட்டவுடன் தயாராக காத்திருந்த நரிக்குறவர் நாயை சுட்டுக் கொன்றார்.

துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் நாய் சுருண்டு விழுந்து துடிதுடித்து இறந்தது. இதுகுறித்து, சீனிவாசன் பள்ளிகொண்டா போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 2 வாலிபர்கள் ஒரு நாயை கீழே தூக்கி வீசினர். இதில் கால்கள் உடைந்து, அந்த நாய் பலத்த காயமடைந்தது.

நாயை தூக்கி வீசிய வாலிபர்களே வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு சிக்கிக் கொண்டனர். வீடியோவை பார்த்த, விலங்கின ஆர்வலர் ஒருவர் நாயை மீட்டு சிகிச்சை அளித்தார். இதுகுறித்து போலீசிலும் புகார் அளித்தார்.

போலீசார், நாயை தூக்கி வீசிய 2 வாலிபர்களையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்று தெரியவந்தது. பிறகு, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 2 மாணவர்களிடமும் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

அதேபோல், நாயை சுட்டுக் கொன்ற இந்த சம்பவத்தை கண்டித்த விலங்கின ஆர்வலர்கள், இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்களுக்கு விரைவில் வழுக்கை வரக்காரணம் தெரியுமா..!!
Next post பெண்கள் சரியான பிரா அணியாததால் ஏற்படும் பிரச்சனைகள்..!!