பாடசாலக்கு சென்று கொண்டிருந்த 11 ஆம் தர மாணவி!! வீதியில் இடம்பெற்ற கொடூரம்..!!
Read Time:1 Minute, 10 Second
கெகிராவ – மகனமுல்ல பிரதேசத்தில் குளவி கொட்டலுக்கு இலக்காகி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி நேற்றைய முன் தினம் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது குளவி கூடு ஒன்று மரம் ஒன்றில் இருந்து வீழ்ந்துள்ளமையின் காரணமாக குறித்த தாக்குதலில் மாணவி சிக்கியுள்ளார்.
குளவி தாக்குதலை தொடர்ந்து, படு காயமடைந்த நிலையில் மரதன்கடவல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக தீவிர
சிகிச்சைக்காக அனுராதபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் மாணவிஉயிரிழந்துள்ளார்.
16 வயதுடைய 11 ஆம் தர திரப்பன்னே பிரதேசத்தினை சேர்ந்த மாணவியேp;இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Average Rating