“காஸ்ரோ படையணி”யென்றால்…. –ரிஎம்விபி இசையாளன்
நேற்றுமுன்தினம் நிதர்சனம்.நெற் இணையத்தளத்திற்கு கருணாஅம்மானின் தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் (ரிஎம்விபி) முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரும் “காஸ்ரோ படையணி”யின் பொறுப்பாளருமான இசையாளன் பேட்டியளித்தது நீங்கள் அறிந்ததே. இதுகுறித்து பெரும்பாலான மின்னஞ்சல்கள் எமக்குக் கிடைக்கப் பெற்றவண்ணம் உள்ளன. அவற்றில் சிலவற்றில் ‘காஸ்ரோ படையணி”யென்றால் என்ன? எனும் கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரிஎம்விபி முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரும் ‘காஸ்ரோ படையணி”யின் பொறுப்பாளருமான இசையாளனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ‘கருணாஅம்மானின் தலைமையில் தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் (ரிஎம்விபி) இராணுவப்பொறுப்பாளராக மார்க்கன் அவர்கள் செயல்படுகின்றார். அவரது தலைமையில் பலபிரிவுகளாக படையணிகள் உருவாக்கப்பட்டு இவற்றுக்கும் ஒவ்வொருவர் தலைமையில் செயல்பட்டு வருகிறோம்.
இந்தவகையில் ‘காஸ்ரோ படையணி”யானது முன்பு புலிகளில் ெஐயந்தன் படையணியில் இருந்து பிரிந்து வந்தவர்களை ஓரணியில் இணைத்து உருவாக்கப்பட்டதே ‘காஸ்ரோ படையணி”யாகும் என்றார்.
“காஸ்ரோ படையணி”யின் பொறுப்பாளரான இசையாளனின் பேட்டி குறித்து மின்னஞ்சல்கள் அனுப்ப வேண்டிய முகவரி :- [email protected] ([email protected])