தண்ணீர் தேடி வீட்டுக்கு வந்த முதலை! முள்ளிவாய்க்காலில் பதற்றம்…!!
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக கடும் வரட்சிநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பொதுமக்கள் குடிப்பதற்கு நீர் பெற்றுக் கொள்வதில் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் வெயில் அதிகரிப்பு காரணமாக நந்திக்கடலில் உள்ள நன்னீர் வற்றி உப்புக்கரிக்கும் நிலை தோன்றியுள்ளதாகவும் இதன் காரணமாக அங்கிருக்கும் முதலைகள் நன்னீர் தேடி ஊர் மனைகளுக்குள் அலைந்து திரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சூழ்நிலையில் இன்று காலை பொதுமக்களின் வீடுகள் ஊடாக திடீரென நுளைந்த முதலை ஒன்று வீட்டுக்குள் நுளைய முற்பட்டவேளை அங்குள்ள பொதுமக்கள் குறித்த முதலையை பிடித்து கட்டி வைத்துள்ளதாதக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தில் உள்ள சிறுவர்கள் முதியவர்கள் உட்பட அனைவரும் முதலைகளின் நடமாட்டத்தினால் பெரும் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating