கொழும்பு செல்ல காத்திருந்த பெண்ணுக்கு வழியில் நேர்ந்த கதி..!!
Read Time:54 Second
காலி-கொழும்பு வீதியில் வத்துரகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலியாகினார்.
இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது. குறித்த பெண், கொழும்பு செல்வதற்காக பஸ் நிலையத்தில் பஸ்ஸிற்காக காத்திருந்துள்ளார்.
இந்த நிலையில் தனியார் பஸ் ஒன்று பாதையை விட்டு விலகி குறித்த பஸ் நிலையத்துடன் மோதியுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணை பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்ததை அடுத்து அவர் உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Average Rating