அநுராதபுரத்தில் விசித்திரமான கோழி…!!
Read Time:1 Minute, 1 Second
அநுராதபுர மாவட்டம் கெக்கிராவை பகுதியில் விசித்திரமான கோழி ஒன்று இனம் காணப்பட்டுள்ளது.
சாதாரணமாக ஒரு கோழி இரண்டு கால்களுடன் உள்ளமை வழமை. எனினும் கெக்கிராவையில் நான்கு கால்களுடன் கோழி ஒன்று காணப்பட்டுள்ளது.
கெக்கிராவை கனேவல்பொல, முஸ்லிம் கிராமம் ஒன்றில் நான்கு கால்களை கொண்ட கோழி ஒன்றின் புகைப்படங்களில் இணையத்தளங்களில் சேர்க்கப்பட்டு பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த கோழிக்கு பிறப்பு முதலே நான்கு கால்கள் உள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
பாய்லர் வகையிலான இந்த கோழி அந்த பிரதேசத்தை சேர்ந்த நசீரா என்பவரின் வீட்டில் வளர்ந்து வருகின்றது.
Average Rating