திண்டுக்கல் அருகே 2 தலைகளுடன் பிறந்த ஆட்டுக்குட்டி…!!
Read Time:57 Second
திண்டுக்கல் அருகே உள்ள பழைய அய்யலூரை சேர்ந்தவர் முனியப்பன். விவசாயியான இவர் ஏராளமான ஆடுகளை வளர்த்து வருகிறார். இவரது வீட்டில் ஆடு ஒன்று 2 குட்டிகளை ஈன்றது. இதில் ஒன்று கிடாக்குட்டி, மற்றொன்று பெண்குட்டி.
இவற்றில் பெண்குட்டி 2 தலைகளுடன் பிறந்து உள்ளது. இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. உயிருடன் நலமாக உள்ள இந்த ஆட்டுகுட்டியை ஏராளமானோர் திரண்டு வந்து பார்த்து அதிசயித்தனர்.
இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில் வெள்ளிக்கிழமை அன்று பெண் குட்டி ஈன்று உள்ளதால் குடும்பம் விருத்தியாகும். செல்வம் பெருகும் என்றனர்.
Average Rating