துருக்கியில் தற்கொலை படை தாக்குதல் நடத்த முயன்ற 2 பயங்கரவாதிகள் குண்டுவெடித்து பலி…!!

Read Time:1 Minute, 40 Second

201610090548267516_two-suicide-bombers-kill-themselves-after-turkish-police_secvpfதுருக்கி தலைநகர் அங்காராவில் 2 பயங்கரவாதிகள் மறைந்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அப்போது பயங்கரவாத கும்பலை சேர்ந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் அங்குள்ள ஹய்மனா மாவட்டத்தில் குதிரை பண்ணையில் பதுங்கி இருப்பதாக தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் பிடிக்க அந்த பண்ணைக்கு சென்றனர்.

போலீசாரை கண்ட பயங்கரவாதிகள் அங்குள்ள குடிசையில் பதுங்கிக்கொண்டனர். போலீசார் அவர்களை சரணடையும்படி கூறினர். சரணடைய மறுத்த இருவரும் தாங்கள் வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர். அதில் அந்த 2 பயங்கரவாதிகளும் உயிர் இழந்தனர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் காரில் வெடிகுண்டுகளை வைத்து தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. இவர்கள் எந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் என்பது பற்றி இன்னும் தெரியவில்லை. அவர்களில் அந்த ஆண் பயங்கரவாதி குர்திஸ்தான் தொழிலாளர்கள் இயக்கத்துடன் தொடர்பு உள்ளவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 12 வயது சிறுமியை கர்ப்பம் கணவர் கைது…!!
Next post 2020ல் இலங்கை நிலக்கண்ணி வெடிகளற்ற நாடாக மாற்றம் பெறும்?