மலையக மக்களுக்கு மற்றுமொரு தலையிடி – 36 மணிநேர நீர்வெட்டு…!!

Read Time:1 Minute, 26 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90நாட்டில் வறட்சி ஏற்பட்டாலே, நீர் தட்டுப்பாடு ஏற்படும், நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்ற அச்சம் மக்களிடையே அதிகமாக காணப்படுகின்றது. இந்தப் பயத்தை அதிகரிக்கும் முகமாக மலையகத்தில் சுமார் 36 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி இன்று இரவு 09 மணி முதல் சில பிரதேசங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

சில மணித்தியாலங்கள் நீரின்றிப் போனாலே மக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி விடும். 36 மணித்தியாலங்கள் என்றால் மக்கள் அதிக சிரமத்திற்கு முகம்கொடுக்க வேண்டி வரும்.

கண்டி மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள், அக்குரன, குண்டசாலை, பாத்ததும்பர, ஹரிஸ்பட்டுவ, அமுனுகம மற்றும் சிறிமல்வத்த ஆகிய பிரதேசங்கிளலேயே இவ்வாறு 36 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நயன்தாரா படத்தில் வில்லனாகும் பாலிவுட் இயக்குனர்…!!
Next post யாழில் மீண்டும் தலைதூக்கிய வாள்வெட்டு கலாச்சாரம்: குடும்பஸ்தர் பரிதாபகரமாக பலி…!!