முதல்வரின் அறைக்குள் மருத்துவர் வேடத்தில் மர்ப நபர்! வைத்தியசாலையில் பரபரப்பு…!!
பிரதமர் மோடி அவர்களுக்கும் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் ஆழ்ந்த நட்பும், சகோதரன், சகோதரி என்கிற உறவும்,நல்ல புரிதலும் உண்டு. எந்த காலகட்டத்திலும் இருவரின் அன்புக்கும் பாசத்திற்கும் பிரிவு வந்ததே இல்லை என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஆயிரம் வேலைகளிலும் தனது சகோதரி ஜெயலலிதா மேல் தனி கவனம் வைத்திருப்பவர் மோடி. முதல்வரின் உடல்நிலை குறித்து சமூக விரோதிகள் தினம் தினம் வதந்திகளைப் பரப்பி வரும் வேலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர், ராகுல் காந்தி அப்போலோ மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் முதல்வரின் உடல் நலம் விசாரித்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முதல்வரின் நண்பர் மோடி வரவில்லை எனும் குற்றச்சாட்டை சில விஷமிகள் பரப்பினர்.
ஆனால் நேற்று வெளியான ஒரு புலனாய்வு வார இதழில் முதல்வரின் உடல்நிலை பற்றி அறிவதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவர்களுடன் பிரதமரின் உளவுப் பிரிவு அதிகாரியும் ஒருவராக வந்து முதல்வரைப் பார்த்துச்சென்றார் என்று எழுதப்பட்டுள்ளது.
குறித்த விடயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating