இலங்கையில் சீனப் பெண்ணுக்கு எமனாக மாறிய செல்பி…!!
காலி – அம்பலாங்கொட பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் ஒன்றில் தூக்கி வீசப்பட்ட நிலையில் சீனப்பெண் (25) ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண், புகையிரத மிதி பலகையில் நின்று கொண்டு செல்பி எடுத்த காரணத்தினாலேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு குறித்த சீனப் பெண் செல்பி எடுத்துக் கொண்டிருந்த வேளையில், புகையிரதம் அம்பலாங்கொட மாதம்பை நிலையத்தை அடைந்ததை அடுத்தே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என பொலிஸார் கூறியுள்ளனர்.
ஓமனில் செல்பி எடுத்துக் கொண்டிருந்த இரண்டு இலங்கை பெண்கள் நீரில் மூழ்கி பலி!
ஓமன்,மஸ்கட் Ain Garziz பகுதியில் மூழ்கி இரண்டு இலங்கை பெண்கள் பலியாகியுள்ளனர் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று மாலை 6 மணியளவில் இரண்டு பெண்களின் குடும்பத்தினரும் சுற்றுலா மேற்கொண்டிருந்த போது இரண்டு பெண்களும் செல்பி எடுக்க முயற்சித்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் குறித்த பெண்கள் இருவரும்,செல்பி எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வழுக்கி கீழே விழுந்துள்ளார்.குறித்த பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் மற்றைய பெண் ஈடுப்பட்டுள்ளார் இதன் பிறகு இருவரும் நீர் இருக்கும் ஆழமான இடத்தில் விழுந்து விட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு குறித்த பெண்கள் இருவரையும் வெளியே இழுத்து சுல்தான் கபூஸ் மருத்துவமனைக்கு அனுமதித்ததை அடுத்து அவர்கள் இறந்து விட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் சாலஹா இந்திய பாடசாலையில் கல்விப் பயிலும் Ruwane Delsara Herath Samaraweera என்றும்,மற்றைய பெண் சாலஹா உள்ளூர் தனியார் பாடசாலையில் கல்விப் பயிலும் Zainab என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating