ஒரே நேரத்தில் 80 செல் போன்களை வாங்கிய 3 யு.எஸ். இளைஞர்கள் கைது
Read Time:1 Minute, 5 Second
ஒட்டுமொத்தமாக 80 செல் தொலைபேசிகளை வாங்கிய 3 இளைஞர்களை அமெரிக்க போலீஸôர் சனிக்கிழமை அதிகாலையில் கைது செய்துள்ளனர். செல் தொலைபேசிகளும் தற்போது பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளதை அடுத்து சந்தேகத்தின்பேரில் இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டல்லாஸ் பகுதியைத் சேர்ந்த இந்த இளைஞர்கள் பயங்கரவாத செயல்களுக்கு துணைபோகும் விதத்திலேயே இவ்வளவு செல் தொலைபேசிகளையும் வாங்கியிருப்பதாக போலீஸ் அதிகாரி டேல் ஸ்டீவன்சன் சொன்னார்.
இதற்கு ஆதாரமாக தொலைபேசி தகவல் ஒன்றும் போலீஸýக்கு கிடைத்தது என்றார் அவர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 18, 22 மற்றும் 23 வயதுடையவர்கள்.