திருப்பத்தூர் அருகே விபத்து: 2 பேர் பலி…!!

Read Time:1 Minute, 35 Second

201610091213172584_tiruppattur-near-accident-2-people-death_secvpfகிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கோமாளிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 30). அதே பகுதியை சேர்ந்தவர் அபியம்மாள் (35). இருவரும் கூலித் தொழிலாளர்கள். இன்று காலை 2 பேரும், வேலூர் மாவட்டம் திருப்பத்தூருக்கு பைக்கில் வந்தனர்.

அதன்பிறகு, ஊர் திரும்பினர். திருப்பத்தூர் அடுத்த கந்திலி பனந்தோப்பு சமத்துபுரம் என்ற இடத்தில் சென்றபோது, கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த தனியார் பஸ், பைக் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த கோர விபத்தில் பைக் நொறுங்கியது. விபத்து ஏற்படுத்திய பஸ்சின் சக்கரத்தில் சிக்கி சின்ன தம்பியும், அபியம்மாளும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

தகவலறிந்து வந்த கந்திலி போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாணியம்பாடியில் வாலிபர் அடித்துக் கொலை…!!
Next post ஞாபகசக்தி குறைவினால் அவஸ்தையா? அப்போ கிரீன் ஆப்பிள் சாப்பிடுங்க…!!