சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்தவர் கைது…!!
Read Time:1 Minute, 2 Second
மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருமுருகண்டி இந்துபுர கிராமத்தில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, 2000 மில்லி லீற்றர் கசிப்பை உடைமையில் வைத்திருந்தவரை மாங்குள பொலிஸ் அதிகாரியின் உத்தரவின் அடிப்படையில் விஜயசிங்கா(52543) மற்றும் அஜந்த(45002) அடங்கிய அணியினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்தை தொடர்ந்து சந்தேகநபரையும், தடையப்பொருட்களையும் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Average Rating