திருமலை – புத்தளம் வீதி விபத்தில் ஒருவர் பலி…!!
Read Time:48 Second
திருகோணமலை – புத்தளம் வீதியில் 77 மைல் கல் பகுதியில் நடந்த வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனியார் பஸ் ஒன்று பயணி ஒருவரை இறக்கி விட்டு முன்னோக்கி சென்ற போது, அதில் இருந்து இறங்கிய நபர் பஸ்சில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
மொரனேவ பிரதேசத்தை சேர்ந்த 76 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பஸ் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து ஹொரவபொத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating