துருக்கியில் 5 டன் வெடிப்பொருட்களுடன் கார் குண்டு தாக்குதல் – 18 பேர் பலி…!!
Read Time:58 Second
துருக்கி நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள செம்டின்லி நகரில் உள்ள ராணுவ காவல் நிலையம் அருகேயுள்ள சோதனைச் சாவடியில் நேற்று வாகன சோதனை நடைபெற்றபோது அவ்வழியாக வந்த ஒரு கார் வெடித்து சிதறியதில் 10 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களில் 8 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தலைநகர் இஸ்தான்புல் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துருக்கி பிரதமர் பின்பாலி இல்ட்ரிம், 5 டன் அளவிலான வெடிப்பொருட்களை கொண்டு நேற்றைய கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
Average Rating