பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி விடைத்தாளில் திரைப்படங்களின் பெயர்கள், கவிதைகள்…!!
பீகாரில் நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வில் அரசியல் பாடப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவியாக அறிவிக்கப்பட்ட ரூபி ராய் உள்ளிட்ட சிலர், அடிப்படை கேள்விகளுக்குக் கூட பதில் தெரியாதவர்கள் என்பது உள்ளூர் தொலைக்காட்சி ‘சேனல்’கள் மூலம் அம்பலமானது.
முதலிடம் பெற்ற 14 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறாத ரூபி ராய் உள்ளிட்ட மாணவர்களின் பிளஸ்-2 தேர்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுப் படையினர், ஜூன் மாதம் 25-ம் தேதி ரூபி ராயை கைது செய்து, பியோர் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், முதலிடம் பிடித்த மாணவியின் தேர்வு தாளில் திரைப்படங்களின் பெயர்கள், கவிதைகள், துலசிதாஸ் பெயர் ஆகியவை எழுதியிருந்தது தெரிய வந்துள்ளது.
முதலிடம் பிடித்த மாணவியின் விடைத்தாள் வேறு ஒருவரால் எழுதப்பட்டு தடவியல் சோதனையில் தெரியவந்துள்ளது. கையெழுத்து விடைத்தாளில் ஒத்து போகவில்லை என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தடயவியல் சோதனையில் ரூபி ராயின் விடைத் தாள்கள் மாற்றப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்ட நிலையில். மாற்றி வைக்கப்பட்ட விடைத்தாள்களை எழுதியவர் யார் என்பதை கண்டறிய சிறப்பு நிபுணர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Average Rating