காஷ்மீர்: அரசு அலுவலகத்தில் திடீர் தீ – துப்பாக்கிச் சூடு…!!
Read Time:1 Minute, 24 Second
ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள அரசு அலுவலகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான செம்போரா என்ற இடத்தில் மாநில அரசுக்கு சொந்தமான தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிலகத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.
இந்த கட்டிட வளாகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்பு கருதி உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
தீப்பற்றி எரியும் அந்த கட்டிடத்தில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டதாக அப்பகுதியை சேர்ந்த ஒரு ராணுவ வீரர் குறிப்பிட்டுள்ளார்.
இதே கட்டிடத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பாதுகாப்பு படைகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையில் தொடர்ந்து 48 மணிநேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது நினைவிருக்கலாம்.
Average Rating