வயதானவர்களை பயமுறுத்தி முரசுமோட்டையில் திருடர்கள் கைவரிசை..!!
கிளிநொச்சி முரசுமோட்டை பழையகமம் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலைபன்னிரண்டு நாற்பது மணியளவில் முகத்தினை மறைத்துக் கட்டியவாறு புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த வயதான தம்பதியர்களை கொட்டன்களால்அடிப்போம் எனப்ப யமுறுத்தி வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகள் என்பவற்றை திருடிச் சென்றுள்ளனர்
குறித்த சம்பவம் தொடர்பாக குறித்த வயதான பெண் தெரிவிக்கையில்,
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை பன்னிரண்டு நாற்பது மணியளவில் நாய்கள் குரைத்ததாகவும், அதனைதான் வெளியில் வந்து பார்வையிட்ட போது திடீரென கைகளில் கொட்டன்களுடன்நுழைந்த மூவர் தனது கைகளை பிடித்தவாறு சத்தம் போட்டால் அடிப்போம் எனகொச்சை தமிழில் உரையாடிய வண்ணம் வீட்டினுள் அழைத்துச் சென்றனர்.
அதன் பின்னர் கணவனையும் தன்னையும் பிடித்து ஒரு இடத்தில் இருத்தி விட்டுவீட்டின் மின்குமிழ்களை அடித்து உடைத்து முப்பது நிமிடமாக வீட்டினை சல்லடைபோட்டு வீட்டில் இருந்த இருபதாயிரம் பணம் மற்றும் மூன்று பவுண் சங்கிலி ,இரண்டு பவுண் சங்கிலி ,அரைப் பவுண் மோதிரம் உள்ளடங்கலாக ஐந்தரைப் பவுண் நகைகள்என்பவற்றையும் திருடிச் சென்றுள்ளதாகத் தெரிவித்தார்
அதற்கிடையில் கணவனுக்கு நெஞ்சுவலி ஏற்ப்பட்டதாகவும் அதில் தம்மைகட்டுப்பாட்டில் வைத்திருந்த நபர் குடிப்பதற்கு தண்ணீர் மற்றும் காற்றுவிசுக்குவதற்கு மட்டை என்பவற்றையும் எடுத்துக் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக இன்று காலை கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில்போடப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய கிளிநொச்சி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப்பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating