குளவிக் கொட்டு காரணமாக பாடசாலை மூடல்..!!
Read Time:1 Minute, 7 Second
எம்பிலிபிடிய – பனாமுர பகுதியில் பாடசாலை ஒன்றில் இன்று(12) காலை குளவித் தாக்குதல் காரணமாக பாடசாலை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பாடசாலையின் அதிபர் உட்பட இரு மாணவிகள், மற்றும் மாணவர் ஒருவரும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வலயக் கல்விப் பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைய இன்று குறித்த பாடசாலைக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்தப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குளவித் தாக்குதல் குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating