பதுளையில் மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் இன்று திறப்பு…!!
பதுளையில் மூடப்பட்ட பாடசாலைகள் இன்று(12) திறக்கப்படவுள்ளதாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டு மைதானத்துக்கு பின்புறமாக உள்ள குப்பை மேட்டில் கடந்த மூன்று நாட்களாக பரவி வந்த தீ அணைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தீயை கட்டுப்படுத்துவதற்காக வான்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்திகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணிகளில் இராணுவத்தினர், வான்படையினர் மற்றும் தீயணைப்பு பிரிவினர் ஈடுப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக பதுளை நகரில் உள்ள 5 பாடசாலைகள் நேற்று மூடப்பட்டிருந்தன.
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயம், கனிஸ்ட்ட சரஸ்வதி, அல் அதான் வித்தியாலயம், விகாரமஹாதேவி மகா வித்தியாலயம், ஊவா கல்லூரி, தர்மதூத ஆகிய பாடசாலைகளே மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Average Rating