கள்ளக் காதலியின் வயதான தாயை துஷ்பிரயோகம் செய்தவரை தேடும் பொலிஸார்…!!
கள்ளக் காதலியின் 79 வயதான தாயை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் தேடுதல் வேட்டையொன்றை ஆரம்பித்துள்ளனர்.
மிஹிந்தலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மிஹிந்தலை வெலிஓய கொலனி ரம்பாவெ பகுதியில் வசித்து வந்த 79 வயதான மூதாட்டி ஒருவரே பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மிஹிந்தலை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் சுமார் 50 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவரை கைது செய்ய தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மதவாச்சி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னதாக கர்ப்பிணியான குறித்த நபரின் கள்ளக் காதலி நோய் வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் மதுபோதையில் தனித்திருந்த குறித்த கள்ளக் காதலியின் 79 வயதான தாயின் வீட்டுக்குள் புகுந்த 50 வயதான நபர், பல்வேறு துன்புறுத்தல்களை மேற்கொண்டு அந்த மூதாட்டியை பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.
வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட மூதாட்டி அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Average Rating