பஞ்சாப்: தலித் இளைஞர் சடலம் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுப்பு- 6 பேர் மீது வழக்குப் பதிவு…!!
பஞ்சாப் மாநிலத்தில் தலித் இளைஞர் சடலம் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட தலித் இளைஞர் சுக்சைன் சிங் பஞ்சாப் மாநிலம் காரங்னா கிராமத்தை சேர்ந்தவர். இவர் சிறிய அளவில் மதுபான கடத்தல் செய்து வந்துள்ளார்.
சுக்சைன் சிங்கிற்கும் அதே பகுதியை சேர்ந்த சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டுவந்த சில மேல் வகுப்பை சேர்ந்த நிலக்கிழார்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்துள்ளது. இந்நிலையில், சுக்சைன் சிங் சடலம் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போட்டி குழுவினர் தன் மகனை தொழிலை கைவிடுமாறு அடிக்கடி மிரட்டல் விடுத்ததாக சுக்சைனின் தந்தை ரெஷாம் சிங் தெரிவித்தார். இதனிடையே பிரேத பரிசோதனை செய்வதற்கு சுக்சைனின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததோடு, முதலில் போலீசார் காணாமல் போன காலினை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
முன்னதாக, நண்பர்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த சக்சைனை சிலர் கடத்தி சென்றுவிட்டதாகவும், பின்னர் அவரது உடல் குற்றம்சாட்டப்பட்டர்களில் ஒருவரது வீட்டின் அருகே கண்டெடுக்கப்பட்டதாகவும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் தெரிவித்தார். அவரது கால் வெட்டப்பட்டதோடு, உடலிலும் சில காயங்கள் இருந்ததாக அவர் கூறினார்.
Average Rating