கேரளா: கன்னூரில் பாரதிய ஜனதா தொண்டர் வெட்டிப் படுகொலை…!!

Read Time:1 Minute, 43 Second

201610121238175224_kerala-bjp-activist-hacked-to-death-in-kannur_secvpfகேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் ரெமித் என்ற 32 வயதான பாரதிய ஜனதா தொண்டர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கேரள செய்திகளின்படி இன்று காலை 10.30 மணியளவில் பினராயி நகரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே கொலையான பா.ஜ.க. தொண்டரை சிலர் கடுமையாக தாக்கியதாகவும், இதில் அவரது கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இதே கன்னூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர் கொலை செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குள் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

52 வயதான மார்க்சிஸ்ட் தொண்டர் மோகனன் மக்கள் நடமாட்டமுள்ள மார்க்கெட் பகுதியில் 5 பேர் கொண்ட கும்பலால் அவரது கடையில் அடித்து கொல்லப்பட்டார்.

கன்னூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.

இந்த மோதல் சம்பவங்களில் இரு தரப்பிலும் தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருகிறது. கேரளாவில் தற்போது இடதுசாரி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பஞ்சாப்: தலித் இளைஞர் சடலம் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுப்பு- 6 பேர் மீது வழக்குப் பதிவு…!!
Next post ரஜினிகாந்தை விட பெரிய நடிகர் யாருமில்லை: ராதிகா ஆப்தே புகழாரம்…!!