இருவேறு இடங்களில் இருவரின் சடலம் மீட்பு…!!
Read Time:1 Minute, 23 Second
பொலன்னறுவை நிஸ்ஸங்க லதா மண்டபத்திற்கு அருகில் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபரை மீட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தொடர்பில் பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, வியாங்கொட பகுதியில் உள்ள இறப்பர் தோட்டத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் 45 வயதுடைய நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வியாங்கொட (Udammita) உடம்மித்த பகுதியை சேர்ந்தவரே கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் வியாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
Average Rating