கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததால் இரும்புச்சங்கிலி தாக்குதல்…!!
கிளிநொச்சி ஏ-9 வீதியில் கடந்த மாதம் இரு வாகன சாரதிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற கிளிநொச்சி வீதி போக்குவரத்துப் பொலிஸார் குறித்த உழவு இயந்திரச்சாரதியை இரும்புச்சங்கிலியால் மூர்க்கத்தனமாக தாக்கிய காணொளிகள், புகைப்படங்கள் ஊடகங்களினூடாக வெளியிடப்பட்டிருந்தன.
பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்த சாரதி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், இவரது மனைவி மற்றும் பாதிக்கப்பட்டவர்களால் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் மனித உரிமை அமைப்புக்களிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் கிளிநொச்சி ஏ-9 வீதியில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் என்னும் குற்றச்சாட்டில் பொலிஸார் வழக்குத்தாக்கல் செய்துள்ளனர்.
தாக்கல் செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புபட்ட நபரை எதிர்வரும் 17ஆம் திகதி முன்னிலைப்படுத்துமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating