மலைத்தொடரில் பாரிய தீ : கட்டுப்படுத்தும் முயற்சி தோல்வி..!!

Read Time:1 Minute, 24 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-3பதுளை மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ள ஹோட்டன் சமவெளி சரணாலயத்திற்கு அருகாமையிலுள்ள ஒஹிய உடவேரிய மலைத்தொடரில் இன்று அதிகாலை முதல் தீ பரவி வருகின்றது.

குறித்த தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரதேச மக்களும் சரணாலய அதிகாரிகளும் ஈடுபட்டு வந்துள்ளதுடன் இருப்பினும் இவர்களின் முயற்சி பயனளிக்காது போயுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த மலைத்தொடரில் ஏற்பட்டுள்ள தீயினால் மலையிலிருந்து கற்கள் புரண்டு விழும் அபாய நிலையை எதிர்நோக்கியுள்ள 13 குடும்பங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தோட்ட நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

தற்போது வரை 40 ஏக்கர்களுக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயினால் அழிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி ஒஹிய உடவேரிய மலைத்தொடரில் தொடர்ந்தும் தீ பரவி வருகின்றமை குறிப்பிடதக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததால் இரும்புச்சங்கிலி தாக்குதல்…!!
Next post சாமி ஆடிய நிலையில் கிணற்றினுள் இறங்கிய குடும்பஸ்தர் மரணம்…!!