கொழுந்து பறித்த பெண்ணை தாக்கிய மான்…!!
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோவர் கிரன்லி தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டியிருந்த பெண் தொழிலாளர் இன்று (13) ஒருவரை அப்பகுதியில் மேய்ந்து கொண்டியிருந்த மான் தாக்கியதால் குறித்த பெண் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர் 55 வயதுடைய ஜெயராமன் ஜெயராணி என தெரிய வந்துள்ளது.
பெருந்தோட்ட பகுதியில் உள்ள தேயிலை மலைகள் காடாகி காணப்படுவதால் தேயிலை மலைகளில் விஷப்பூச்சிகள், விஷப்பாம்புகள், அட்டை, சிறுத்தை, காட்டு எருமை, குளவி என்பன தேயிலை செடிகளில் வாழ்வதால் தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்தில் தொழில்செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தோட்ட தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே தோட்ட நிர்வாகம் தேயிலை மலைகளை முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Average Rating