ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது…!!
Read Time:1 Minute, 10 Second
ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொமட்டகொட பிரதேசத்தில் வைத்து சற்று முன்னர் இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணிடமிருந்து 55.33 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
தெமட்டகொட வீட்டுக் குடியிருப்பு தொகுதியிலிருந்து மீட்கப்பட்ட இந்தப் போதைப் பொருளின் சந்தைப் பெறுமதி 180,000 ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.
அல்மதுரா தம்மிகா சில்வா என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்பய்பட்டுள்ளார்.
இந்தப் பெண்ணிடமிருந்து 185,000 ரூபா பணமும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் மாளிகாவத்தை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
Average Rating