மோட்டார் சைக்கிள் நடுவீதியில் தீக்கிரை….!!
வீதியால் பயணித்து கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று வியாழக்கிழமை காலை பதினொரு மணியளவில் தாமாகவே தீப்பற்றி முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
வந்தாறுமூலை லேக் ஹவுஸ் வீதியை சேர்ந்த குறித்த மோட்டார் சைக்கிள் சாரதியான நவரெட்ணம் குமாரதேவன் என்பவரும் அவருடைய நண்பர் ஒருவரும் வயலில் இருந்து சாக்குப்பையில் வைக்கோல் கொண்டு வரும் போது வைக்கோல் சரிந்து மோட்டார் சைக்கிள் சைலேஞ்சர் பகுதியில் உராய்வு ஏற்பட்டு புகை வெளிவர ஆரம்பித்தது.
இந்த சம்பவத்தை வீதியால் சென்ற ஒருவர் கண்டு மோட்டார் சைக்கிள் சாரதியிடம் அறிவித்தவுடன் அவர்கள் உடனடியாக இறங்கி தீப்பற்றுவதை அவதானித்து கட்டுப்படுத்த முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, இதனைக் கண்ட பொலிஸாரும் தீயணைப்பில் ஈடுபட்ட போதும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது போன நிலையில் மோட்டார் சைக்கிள் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு மிக அருகில் பெற்றோல் நிரப்பு நிலையம் ஒன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating